அதலை ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் குருபூஜை விழா
ADDED :352 days ago
அலங்காநல்லுார்; மதுரை அருகே அதலையில் ராமலிங்க சுவாமி சமாதி மடம் உள்ளது. இங்கு சுவாமி குருபூஜை விழா சித்தர்கள் வழிபாட்டுடன் 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நேற்று அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பெண்கள் கோயில் மரத்தில் வேண்டுதல் பொம்மைகள் வைத்தும், தொட்டில் கட்டியும் வழிபட்டனர். சித்தர்கள், அடியார்கள் உணவு சாப்பிட்ட இலையை நேர்த்தி கடனுக்காக பக்தர்கள், பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்தனர். விவசாயிகள், பொதுமக்கள் விலை நிலங்கள் மற்றும் வீடுகளில் விளைந்த நெல் ,அரிசி, புளி, காய்கறி உள்ளிட்ட விலை பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (மே 16) சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை மடத்து நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.