உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பாகூர்; பாகூர் ஸ்ரீமூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள கால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு கோவிலில் அருள் பாலித்து வரும் கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடந்தது. செந்நிற மலர்கள் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !