உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

காரமடை மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சி, ஆசிரியர் காலனி பாலாஜி நகரில், மகா கணபதி கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்து, தட்சிணாமூர்த்தி, முருகப்பெருமான், துர்க்கை அம்மன், நவகிரகங்கள் ஆகிய சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டன. இதன் கும்பாபிஷேக விழா, 4ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது.பின்பு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து சென்று விமானம் மற்றும் மூல ஸ்தாபனம் மகா கணபதிக்கும், பரிவார் மூர்த்திகளுக்கும் தீர்த்த ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !