மைக்கண் மாரியம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
ADDED :133 days ago
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகரில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது. மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடையில், மிகவும் பழமை வாய்ந்த மைக்கண் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடந்தது. இதை அடுத்து திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், தெய்வ சேக்கிழார் ஆகிய விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்து, அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருஞானசம்பந்தருக்கும் அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. பின்பு அலங்காரம் செய்த பல்லக்கில், திருஞானசம்பந்தரை கோவிலைச் சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.