திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்
ADDED :74 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜ கோபுரத்தில் சியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் 4ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி உற்ஸவ விழா நேற்று விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு, பூஜையுடன் துவங்கியது. ஜூலை 4வரை தினம் மகா வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜூலை 5ல் யாகபூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.