உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராஹி அம்மன் கோவில்களில் வளர்பிறை பஞ்சமி பூஜை

வாராஹி அம்மன் கோவில்களில் வளர்பிறை பஞ்சமி பூஜை

நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி மகாவாராஹி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதைப்போலவே கம்பிலியம்பட்டி வர சித்தி வாராகி அம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோவில் வாராஹி அம்மன்,அசோக்நகர் பகவதி அம்மன் கோவிலில் உள்ள வாராஹி அம்மன் கோவில்களிலும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !