கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி
வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது.
வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் இன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 30ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. முதல் நாளான அன்று காலை 10:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், ஆச்சார்யா வர்ணம், கிராம தேவதை வழிபாடு, மங்கல இசை உள்ளிட்டவை.
இரண்டாம் நாளான ஜூலை 1ம் தேதி காலை 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமமும், மாலை 5:00 மணிக்கு ம்ருத் ஸங்கிரஹணம், கிராம சாந்தி நடந்தது.
மூன்றாம் நாளான ஜூலை 2ம் தேதி காலை 7:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம். சம்ஹிதா ஹோமமும், இரவு 7:00 மணிக்கு பிரவேசபலி நடந்தது.
நான்காம் நாளான ஜூலை 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், பிரதான ஆச்சார்ய தச வித ஸ்நாநமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பிரதான ஆச்சார்ய ரக்ஷாபந்தனம் நடந்தது.
ஐந்தாம் நாளான ஜூலை 4ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தசங்க்ரஹ ணம், அக்னி சங்க்ரஹணம், யாகசாலை அலங்காரமும், மாலை 4:00 மணிக்கு ரித்விஜர் ரக்ஷாபந்தனம், விசேஷசந்தி, மண்டபார்ச்சனை, கும்பாலங்காரம் கலார்கர்ஷணம், யாத்ரா ஹோமம், க்ஷண ஹோமம், யாத்ராதானம், கிரகப்ரீத்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, த்ரவ்யாஹூதி, முதல் கால பூர்ணாஹூதி, தீபாராதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
ஆறாம் நாளான நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஷடத்வந்யாசம், த்ரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, கோலகந்யாசம், த்ரவ்யா ஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது.
ஏழாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஸ்ரீகண்டந்யாசம், விசேஷ ஷண்ணவதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை யும், மாலை 4:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, பிம்பகத்தி, 108 கலச ஸ்நபனாபிஷேகம், ரக்ஷாபந்தனம், தத்வார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர் ஸாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.