பழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
ADDED :244 days ago
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ஏராளமான பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். வெளிமாநில, மாவட்ட வருகை புரிந்தனர். கோயிலுக்கு அவர்கள் செல்ல பக்தர்கள் ரோப்கார், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.