நடுவீரப்பட்டு முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :118 days ago
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு மேல்செட்டி தெருவில் முத்தாலம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கெடிலம் ஆற்றிலிருந்து சக்திகரகம் எடுத்து வந்தனர். மதியம் சாலை வார்த்தல், மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.