/
கோயில்கள் செய்திகள் / சம்பா பரமேஷ்வர் கோவிலில் மூலவர் மீது வந்து அமர்ந்த நாகம்; நாகபஞ்சமியில் பரவசம்
சம்பா பரமேஷ்வர் கோவிலில் மூலவர் மீது வந்து அமர்ந்த நாகம்; நாகபஞ்சமியில் பரவசம்
ADDED :120 days ago
பெங்களூரு; பெங்களூரு, வாழும் கலை சர்வதேச மையம் ஒரு ஆன்மீக சொர்க்கமாகவும், வாழும் கலை அறக்கட்டளையின் தலைமையகமாகவும் உள்ளது. 1986 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் நிறுவப்பட்ட இந்த மையம், யோகா, ஆயுர்வேத சிகிச்சைகள், தியானத்திற்கான மையப் புள்ளியாக செயல்படுகிறது. இங்கு அமர்நாத் குகையை நினைவூட்டும் வகையில், சம்பா பரமேஸ்வரர் கோயில் 1008 ஓவல் வடிவ லிங்கங்களைக் கொண்டுள்ளது. இது ஆகம விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நாகபஞ்சமியன்று, ஒரு நாகம் மூலவர் சிவலிங்கத்தின் மீது அமர்ந்தது. இதை கண்ட பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இந்த சிவன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் பலமுறை ருத்ராபிஷேகம் செய்த ஒரு சஹஸ்ர லிங்கம் என்பது குறிபிடத்தக்கது,