திருக்கோவிலூர் கீழையூர் தேரடி விநாயகருக்கு 40ம் ஆண்டு விழா
ADDED :59 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகருக்கு 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா நடந்தது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை விநாயகருக்கு மகா அபிஷேகம், காய்கனிகளால் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா நடந்தது. விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை விநாயகருக்கு மகா அபிஷேகம், காய்கனிகளால் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.