உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் சஷ்டி வழிபாடு; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

வால்பாறை கோவில்களில் சஷ்டி வழிபாடு; முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆடி மாத சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !