பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :151 days ago
கொட்டாம்பட்டி: பிரண்டிப்பட்டி தீப்பாஞ்சி அம்மன் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று மந்தையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இத் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்