உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான பணிகள் துவக்கம்

மதுரையில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான பணிகள் துவக்கம்

மதுரை; மதுரை அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப் பட்டியில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமான திருப்பணிகள் தொடங்கின.மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் சார்பில் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பொய்கைக்கரைப்பட்டியில் கோயில் கட்டப்பட உள்ளது. மலை அடிவாரத்தில், அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே சிட்டி பால்ஸ் என்ற இடத்தில் இக்கோயில் அமைய உள்ளது. வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடிந்தநிலையில், அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. ஆலயம் கட்டுமானத் திருப்பணி நேற்று துவங்கியது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். காலையில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதா பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை, அபிஷேகங்கள் செய்தனர். ஆடிட்டர் சேது மாதவா தலைமை வகித்தார். மதுரை மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்ப செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கினார். நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.ஆர். பிரபு, மகா பெரியவா குரூப்ஸ் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட தலைவர் ரவி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், குழந்தைகள் நல டாக்டர் குமார் வெங்கடேசன், வழக்கறிஞர் கார்த்திக், சோழவந்தான் செல்வராணி, இண்டேன் காஸ் ஏஜன்சி உரிமையாளர் மணிகண்டன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், எழுத்தாளர் ஆதவன், ஸ்தபதி பாஸ் கரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !