உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் நாச்சியார் கோவிலில் புரட்டாசி பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை

ஆண்டாள் நாச்சியார் கோவிலில் புரட்டாசி பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை

உடுமலை;  குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. குறிஞ்சேரியில் உள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாள் அன்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. புரட்டாசி மாத பூரம் நட்சத்திர நாளையொட்டி கோவிலிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆண்டாள் நாச்சியாருக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !