திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :15 hours ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வடிவேல் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் முக்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், வடிவேல் நகரில் சீரடி குபேர சாய்பாபா கோவில் உள்ளது. பாபாவின் முக்கிய தினத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆரத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சுப்பு செய்திருந்தார்.