விருதுநகர் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்
ADDED :20 minutes ago
விருதுநகர்; விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. அரங்கநாதன், மகாலட்சுமி திருக்கல்யாணம் காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் அக். 2ல் துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தனர். பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.