உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி நிர்வாகத்தின் கீழ் 5 கோயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம்

பழநி நிர்வாகத்தின் கீழ் 5 கோயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம்

பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து கோயில்களில் ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.


பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் 50 கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த ஆகம விதிகளில் உள்ளது. இதில் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரம் திருஆவினன்குடி கோயில் கடந்த 2014, செப்., 7 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடிவாரம், வடக்கு கிரி வீதி வீரதுர்க்கை அம்மன் கோயில் 1999,அக், 29ல் கும்பாபிஷேகம் நடந்தது, பழநி மேற்கு ரத வீதி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் 2012,நவ., 11 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனுடன் சத்திரப்பட்டி, பெரியகோட்டை, விநாயகர் கோயில், வேளீஸ்வரர் கோயில், ஆயக்குடி, வேளீஸ்வரர் கோயில் ஆகியவற்றிற்கு பாலாலய பூஜை நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயில்களின் பழமை தன்மை மாறாமல் தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நவ., மாதத்திற்குள் நிறைவு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முருகன் கோயிலில் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !