உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு அபிஷேக ஆராதனை

விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு அபிஷேக ஆராதனை

விருத்தாசலம்; சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் சுவாமிக்கு இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பு அபி ேஷகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !