விருதை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு அபிஷேக ஆராதனை
ADDED :18 minutes ago
விருத்தாசலம்; சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் சுவாமிக்கு இன்று காலை 10:30 மணியளவில் சிறப்பு அபி ேஷகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.