உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு பேசும் சப்தகன்னிமார் கோயில் திருவிழா

வத்தலக்குண்டு பேசும் சப்தகன்னிமார் கோயில் திருவிழா

வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பேசும் சப்தகன்னிமார் கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது . கும்பாபிஷேகம் முடிந்து 48-ம் நாள் மண்டல யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. சப்த கன்னிமார்கள் பூக்கள், பட்டாடைகள் நாணல் புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர், கருப்பணசாமி, முனியாண்டி, நாகம்மாள்,வேட்டைக்காரன் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து உலக நன்மைக்காகவும்,மழை வேண்டியும் தீபாராதனைகள் கூட்டு வழிபாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து புரட்டாசி திருவிழாவில் சக்தி கிடா பலியிட்டு பொங்கல் வைத்தனர். உச்சி கால பூஜை செய்து படையலிட்டு அருள்வாக்கு கூறப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் கறி விருந்து நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி பாண்டி செய்திருந்தார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !