திண்டிவனத்தில் கேதார கவுரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபாடு
ADDED :147 days ago
திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு கேதார கவுரி நோன்பு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நோன்பு எடுக்க அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் சன்னிதியில், பெண்கள் நோன்பு சட்டியுடன் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நோன்பு எடுத்தனர். ஏராளமானோர் காலையிலேயே கோவில்களில் சாமி தரிசனம் செய்து நோன்பு எடுத்து வீடு திரும்பினர்.