விழுப்புரம் அமைச்சார் அம்மனுக்கு சதுர்தசி நோன்பு வழிபாடு
ADDED :17 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு நடந்தது.
தீபாவளி பண்டிகை தினத்தில், நேற்று மாலை 6:00 மணியில் இருந்து நேற்று மாலை 4:15 மணி வரை சதுர்தசி நோன்பு எடுக்கும் நேரம் ஆகும். இதையொட்டி, பெண்கள் தங்களின் குடும்பத்தோடு, விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் இன்று காலை 11:00 மணிக்கு வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டநோன்பு சட்டிகளை சுவாமி முன் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, மாலை 4:15 மணி முதல் இன்று 21ம் தேதி மாலை 5:30 மணி வரை அமாவாசை நோன்பு எடுக்கும் நிகழ்வு நடந்தது.