உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பகவான் ஜெயந்தி விழா; தீபம் ஏற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு

சனி பகவான் ஜெயந்தி விழா; தீபம் ஏற்றி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு

 புதுச்சேரி: சனி பகவான் அவதார ஜெயந்தியையொட்டி, முதல்வர் ரங்கசாமி சாரம் சுப்ரமணியர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டார்.

வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் சனி பகவான் அவதரித்தார். அதனையொட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி மாதம், பரணி நட்சத்திரம், அமாவாசை தினத்தில் சனிக்கிழமை நேற்று வந்ததால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அதனையொட்டி முதல்வர் ரங்கசாமி, நேற்று இரவு சாரம் சுப்ரமணியர் கோவில் தேவஸ்தானத்தில் உள்ள முத்து விநாயகருக்கு 2 நெய் விளக்கு, சுப்ரமணியருக்கு 6 நெய் விளக்கும், கோவிலில் வன்னி மரத்தின் கீழ் மேற்கு பார்த்த நிலையில், தனி சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு இரண்டு 2 பெரிய எள் விளக்குகள் ஏற்றி வணங்கினார். முன்னதாக சனி பகவானுக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சிவராமன், கார்த்திகேயன் ஆகியோர் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆலய நிர்வாகி பொன் நீலக்கண்டன், தணிகைவேல் குமார், பொன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !