உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் : இணை ஆணையர் புகார்

ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் : இணை ஆணையர் புகார்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் எஸ்.பி,யிடம், கோயில் இணை ஆணையர் புகார் செய்தார்.


ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் கோயிலில் புனித நீராட ஒரு பக்தருக்கு ரூ.25ம், தரிசனத்திற்கு ரூ. 100, 200ம், ருத்ர அபிஷேகத்திற்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் மும்பை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி, இதற்கு அட்மினாக ராமேஸ்வரம் சேர்ந்த மகேஸ்வரி பவன் நிர்வாகி ஹரிஷ் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் குஜராத் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் போலி ஏஜென்ட் மூலம் கோயிலில் தரிசனம் செய்ய, தங்குவதற்கும் ரூ.1.60 லட்சம் செலுத்தி ராமேஸ்வரம் வந்துள்ளார். பின் ராமேஸ்வரம் சேர்ந்த மணி, புகழேந்தி ஆகியோர் மூலம் போலி டிக்கெட்டில் கோயிலுக்கு நீராட சென்ற போது, கோயில் ஊழியர்கள் போலி டிக்கெட் என கண்டுபிடித்தனர். இதனையடுத்து கோயில் இணை ஆணையர் செல்லதுரை, போலி வெப்சைட் மூலம் பக்தர்களை ஏமாற்றி ராமேஸ்வரம் சேர்ந்த 3 நபர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி.,சந்தீஸிடம், ஆன்லைனில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !