உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட மாநிலங்களில் தேவ் தீபாவளி; விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு

வட மாநிலங்களில் தேவ் தீபாவளி; விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு

உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி கொண்டாடப்படுவது அப்பகுதிகளில் வழக்கம். அதன்படி நேற்று வட மாநிலங்களில் தேவ் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் தெய்வங்கள் கொண்டாடும் தீபாவளியை,  தேவ் தீபாவளியாக வட மாநிலத்தவர்கள் கொண்டாடுகின்றனர். உத்தராகண்ட் ஹரிதுவாரில் பவுர்ணமி தேவ் தீபாவளியையொட்டி, பக்தர்கள் கோயில்களில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் விளக்கொளியில் ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுராவில் நடைபெற்ற தேவ தீபாவளி நிகழ்ச்சியில் கிரேட் காளி என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா பங்கேற்று வழிபாடு செய்தார். வாரணாசி நகரே லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளிர்ந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !