அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ரோகிணி நட்சத்திர சிறப்பு வழிபாடு
ADDED :15 hours ago
கோவை; ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.