அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா
மானாமதுரை; மானாமதுரை அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மானாமதுரை அண்ணாமலை நகர் துவக்கத்தில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகருக்கு அதிகாலை பால்,பன்னீர்,சந்தனம்,குங்குமம், இளநீர்,திரவியம்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து அர்ச்சகர் நாகமணி ஹோமங்கள் வளர்த்த பின்னர் புனித நீரை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்தார்.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகளும் கோயில் முன்பாக அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் மக்கள் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.விழாவில் அண்ணாமலை நகர்,சாஸ்தா நகர், ராம்நகர், பட்டத்தரசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.