திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்கியது. இதையொட்டி, இன்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன், மற்றும் உற்சவர்கள் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடி மரத்தில், கொடியேற்றம் நடந்தது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, அறியாமை என்னும் இருளை போக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழாவாக கொண்டாடப்படும் முதல் நாள் விழாவில், காலை, 10: மணி அளவில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு, 9:00 மணிக்கு, விநாயகர் மூஷிக வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி வாகனம், பராசக்தி அம்மன் ஹம்சம் வாகனம், சண்டிகேஸ்வரர், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான, வரும், 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், வரும், டிச., 3ல், அதிகாலை, 4:00, மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.