உலக நன்மைக்காக சிறப்பு யாகம்
ADDED :4823 days ago
வேடசந்தூர்: ஆங்கிங புத்தாண்டை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் உள்ள அய்யனார் கோயில், ஆஞ்சநேயர்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேடசந்தூர் அரியப்பித்தம்பட்டி டாக்டர் தோட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலில் உலக அமைதி,மற்றும் வளர்ச்சிக்காக சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தை திருவாரூர் சுரேஷ் குருக்கள் நடத்தினார். மண்டப உரிமையாளர் டாக்டர் வேல்முருகன் ஏற்பாட்டை செய்திருந்தார். அன்னதானமும் நடந்தது.