உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா

ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திரில், வரும் 30 ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.


வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு பெங்களூரு ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரியில், வரும் 30 ம் தேதி காலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு வைரமுடி அலங்காரம்; வைகுண்ட வாசலில் வைகுண்ட சீனிவாசர் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு ஏகாந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 6:00 மணி முதல் வைகுண்ட வாசல் தரிசனம், அர்ச்சனை, ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏகாதசி அன்று ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருளை பெறுமாறு, கோவில் தலைவர் ஏகமூர்த்தி ராமானுஜ தாசர், பிரதான அர்ச்சகர் விஷ்ணு பட்டர் கேட்டு கொண்டுள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !