உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா விமரிசை

மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா விமரிசை

மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.

மீஞ்சூரில் புகழ்மிக்க ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். இதன் பிரம்மோத்சவ விழா, கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்தது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏகாம்பரநாதர் உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.

மங்கள வாத்தியம், செண்ட மேளங்கள் இசையில், பக்தர்கள் பரவசத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

மீஞ்சூர் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !