மார்கழி வழிபாடு; வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ADDED :133 days ago
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் வெண்ணை காப்புடன் 108 வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.