உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பரங்குன்றம் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளதால் நேற்று மாலை கம்பத்தடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள பெரிய கதவு திறக்கப்பட்டு பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினார். 


* திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு முத்தங்கி அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் முடிந்து காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் உற்சவர்கள் அருள்பாலித்தனர். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !