உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம்

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம்

திட்டக்குடி; ஆங்கில புத்தாண்டையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்ணாபிஷேகம் நடந்தது.


இதையொட்டி, இன்று அதிகாலை 5:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு திருமஞ்சனம்; 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 7:00 மணியளவில் முன் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் பூஜை; 8:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது.  பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !