திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் புத்தாண்டு வழிபாடு
திட்டக்குடி; ஆங்கில புத்தாண்டையொட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் காலை 6:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிேஷகம், காலை 7:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து, 8:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, பைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. இதேபோன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், மேற்கு ரதவீதி வீற்றிருந்த பெருமாள், இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, முக்குளம் பிடாரி செல்லியம்மன் ஆகிய கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.