உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி கடைசி சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மார்கழி கடைசி சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் தீப ஒளியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


இதேபோல், கோவை உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. இதில் வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !