உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமியம்பாளையம் ஸ்ரீ சென்றாய பெருமாள் மஹா கும்பாபிஷேக விழா

ராமியம்பாளையம் ஸ்ரீ சென்றாய பெருமாள் மஹா கும்பாபிஷேக விழா

அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா,வெகு விமர்சையாக நடைபெற்றது.


அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கருடாழ்வார்,ஸ்ரீ விநாயகப் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா,வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ம் தேதி சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து ராமியம்பாளையம் சென்றாய பெருமாள் கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து சுவாமி சிலை எடுத்து வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம்,சகல காயத்ரி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, துவார பூஜை, சுப்ரபாத பூஜை, மஹா பூர்ணாஹீதி ஆகியவற்றுடன் ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !