உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுர சுதை சிற்பங்கள் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுர சுதை சிற்பங்கள் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் சேதமடைந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 2500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமஹ பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கும். மேலும் இந்த கோவிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடிமரம் உள்ளது சிறப்பம்சமாகும். இந்நிலையில், பழைமை வாய்ந்த இந்த கோவிலின் ராஜகோபுர கலசத்தின் அருகே உள்ள சுதை சிற்பம் தலையில்லால் உள்ள போட்டோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சுதை சிற்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினரா, அல்லது தானாக சேதமடைந்ததா என தெரியவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !