உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

அங்காளம்மன் கோவிலில் மாசிமக தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 13 நாள் மாசி பெருவிழா இன்று (15ம் தேதி) அங்காளம்மன், கோபால விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு கொடியேற்றமும், 9:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலமும் நடைபெற உள்ளது.


நாளை 16ம் தேதி காலை 9:00 மணிக்கு மயானக்கொள்ளை, 19ம் தேதி மாலை 3:00 மணிக்கு தீமிதி விழா, 21ம் தேதி 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.


மேல்மலையனுார் கோவில் புராணத்தின் படி மயானக் கொள்ளையன்று விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் ஒன்று கூடி தேரின் பாகங்களாக மாறி விழா எடுக்கின்றனர்.


இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய தேர் கட்டும் பணி கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.


விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !