உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகோட்டை கோயிலில் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பெரியகோட்டை கோயிலில் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்

மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கினர்.


மானாமதுரை அருகே பெரியகோட்டை கிராமத்தில் உள்ள சிவகுருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் வருடம் தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் போது இக்கோயிலைச் சேர்ந்த குடிமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நடைபெறும் விழாவையொட்டி தினம் தோறும் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பால்குட விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே பால்குடங்கள், காவடி எடுத்து அலகு குத்தி ஊரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிகளை வழிபட்டனர். கோயில் முன்பாக தினம்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,பூசாரிகள் கோயில் குடிமக்கள் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !