உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்

திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி திருமுறை பயிற்சி வகுப்பு துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி சைவ திருமுறை பயிற்சி மையத்தில், 9வது பேட்ஜ் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், திருமுறை பயிற்சி மைய இயக்குனர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். கந்தபுராண ஞானசபை நிறுவனர் கார்த்திகேயசிவம் வரவேற்றார். திருவாவடுதுறை ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மையத்தின் 9வது பேட்ஜ் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் சைவ சித்தாந்த பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நேரடி பயிற்சி வகு ப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிக்கு புத்தக கட்டணம் ரூ.750 வசூலிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகள் இலவசமாக பன்னிரு திருமுறை, தேவாரம், திருவாசகம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி இரண்டு, சிவன் கோவில், நமசிவாயபுரம் அர்த்தநாரீஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர் கோவில் என 5 மையங்களில் சைவ திருமுறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் ராமசாமி, கார்த்திகேயன், பழனியம்மாள், ஆனந்தன், சுரேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அமைப்பாளர் தமிழழகன் நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !