உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழர் கால கல்வெட்டு திருவண்ணாமலையில் கண்டெடுப்பு

சோழர் கால கல்வெட்டு திருவண்ணாமலையில் கண்டெடுப்பு

செய்யாறு: மடிப்பாக்கம், பெரிய ஏரிப்பகுதியில், சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மடிப்பாக்கம் பெரிய ஏரியின் கிழக்கு திசையில், 82 செ.மீ., நீளம், 58 செ.மீ., அகலம் கொண்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதில், திசை காட்டும் கருவி வரைபடம் மற்றும் அதனருகில், கையில் குடை, கமண்டலம் ஏந்திய குள்ள அந்தண சிறுவன் போன்ற மஹா விஷ்ணுவின் வாமன அவ தாரம் குறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கோவிலுக்கு தானம் கொடுக்கும் நிலத்தை அளவிட, இந்த கருவி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இது, 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !