திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED :7 hours ago
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
திருத்தணி முருகன் கோவிலின் உபக் கோவிலான, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் எட்டாம் நாளில் காலை, 9:00 மணிக்கும், இரவு, 9:00 மணிக்கும், நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும், 1ம் தேதி வரை, பிரம்மோத்சவ விழா நடக்கிறது.