பழநி முருகன் கோயிலுக்கு வந்த பொள்ளாட்சி பறவை காவடி
ADDED :14 hours ago
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் பொள்ளாட்சியை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான காவடிகள் எடுத்தல், முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர். திரு ஆவினன்குடி கோயில் முன்பு அலகு குத்தி, கிரேனில் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் 10 அடி நீளம் உள்ள அலகு குத்தி வந்தனர். பழநி முருகன் கோயில் கிரிவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.