உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவில்கள், வைஷ்ணவ அமைப்பு மற்றும் ஆரிய வைசியர் சங்கத்தினர் சார்பில் கடந்தாண்டு மீண்டும் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நேற்று 2ம் ஆண்டு கும்பாபிேஷக பூர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ேஹாமத்துடன் பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தினர். பகல் 1:00 மணிக்கு ஆராதனை நிகழ்ச்சியும் நைவேத்தியமும் நடந்தது. வைஷ்ணவ அமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமையில், ஆசிரிய வைசிய மகா சபை தலைவர் சுந்தரேசன், தொழிலதிபர் சீனுபாலாஜி, நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழிபாடு செய்தனர். பூஜைகளை நரசிம்மர் உள்ளிட்ட குழுவினர் நடத்தினர். விழாவில் சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !