மகா மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் பக்தர்கள் குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அன்று இரவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிணறு மைதானத்தில் கரகம் அருகே, பாலித்து, மகா மாரியம்மன், பகவதி அம்மன், காளி யம்மன் கரகமும், மலையாள சாமி சூலாயுதத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அபி ஷேக ஆராதனை செய்யப் பட்டு, சுவாமிகள் கோவில் புகுந்து காட்சியளித்தது. பக்தர்களுக்கு நேற்று மதியம் 3:00 மணி யளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை எடுத்துக் கொண்டு, கோவில் அருகில் உள்ள தீ மிதி குண்டத்தில் இறங்கி தங் களது நேர்த்திக்கடனை செலுத் தினர். சுற்று பகுதி கிராம மக் களும் தீ மிதித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.