ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
ADDED :10 hours ago
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்காக பியூஷ் கோயல் தற்போது தமிழகத்தில் முகாமிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை விஸ்வரூப தரிசன வழிபாட்டில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.