பிறரை மதி
ADDED :1 days ago
பழங்களின் மாநாடு நடந்தது. அதில் மனிதர்களுக்கு நாம் எந்த விதத்தில் உதவி செய்கிறோம் என பலாவின் தலைமையில் விவாதம் நடந்தது. பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை, கொய்யா என வரிசையாக ஒவ்வொருவரும் தற்பெருமையுடன் தங்களைப் பற்றி பேசின. ஓரத்தில் அமர்ந்திருந்த திராட்சையை மற்ற பழங்கள் ஏளனமாக பார்த்தன. கடைசியாக திராட்சையை பேச அழைத்தது பலா.