கல்வியின் பயன் என்ன என்று வியாசர் சொல்கிறார்
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன்.
* உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும்.
* பிறவிக்குணம் என்பது ஒருவரை விட்டு எப்போதும் போகாது.
* பணிவு கொண்டவனுக்கு இயற்கை துணைசெய்யும்.
* பேராசையை கைவிடு. இல்லாவிட்டால் ஆபத்து நேரும்.
* தர்மம் உள்ள இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்.
* தர்மத்தை நம்புபவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படும்.
* ஒழுக்கமுடன் வாழ கற்றுக் கொள்; நற்கதி அடைவாய்.
* வீண்பேச்சு கூடாது. எப்போதும் கடவுளின் திருநாமத்தைச் சொல்.
* கடவுளுக்கு நைவேத்யம் செய்த பிறகே சாப்பிட வேண்டும்.
* புத்தியால் மனதை அடக்கு; உனக்கு வெற்றி உறுதி.
* கோபத்தை கைவிடு; துன்பம் உன்னை நெருங்காது.
* தர்மம் வகுத்த வழியில் பணம் தேடு; மகிழ்ச்சியாக வாழலாம்.
* வேதம் விதித்த வழியில் வாழ்வு நடத்து; நிம்மதி காண்பாய்.
* நல்லவர்கள் இருக்கும் வரையில் உலகில் மழை பெய்யும்.