உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித்ஷா தரிசனம்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித்ஷா தரிசனம்

சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து, சிவகிரி அரசு மருத்துவமனை அருகிலிருந்து தீரன் சின்னமலை சிலை வரை, திறந்த வாகனத்தில், ‘ரோடு ேஷா’ நடத்தி ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள், அவரை மலர்கள் துாவி வரவேற்றனர்.


நேற்று மதியம் அவர் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல் மற்றும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். அவர்களுடன் தேர்தல் பணி குறித்த விபரங்களை அமித்ஷா கேட்டறிந்தார். மாலையில் மயிலாப்பூர் சென்ற அமித்ஷா, கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:  சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் பெற்றேன். அந்த இறைவனின் திருவருள் அனைவருக்கும் நல்ஆரோக்கியத்தையும், செல்வச் செழிப்பையும் வாரி வழங்கட்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !